இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
168
ஆடும்
ஆடாத தீபமாக—ஆனால், ஆடும் தீபத்தின் உள்ளப் போக்குடன் அல்லி நின்றாள். எழும்பூர்ச் சந்திப்பு நிலையத்தில் கண்ட அவளை, மீண்டும் கனவுகளின் மடியில் தவழ்ந்து, விளையாடி, அமைதி பெறச் செய்திருக்கின்றேன். அவளது நெஞ்சுரமும், நேர்மைத் திறமும், அவளுடைய கனவுகளை வாழ வைக்கும் என்ற தன்னம்பிக்கை கொண்டவன் நான். ஏனென்றால், நான் அல்லியின் இதயத்தை, நினைவை, குறிக்கோளை, கனவைப் பூரணமாகப் படித்து அறிந்தவன் அல்லவா?
பூவை எஸ். ஆறுமுகம்