பக்கம்:ஆடும் தீபம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

ஆடும்


 ஆடாத தீபமாக-ஆனால் ஆடும் தீபத்தின் உள்ளப் போக்குடன் அல்லி நின்றாள். எழும்பூர்ச் சந்திப்பு நிலையத்தில் கண்ட அவளே மீண்டும் கனவுகளின் மடியில் தவழ்ந்து விளையாடி அமைதி பெறச்செய்திருக்கின்றேன். அவளது நெஞ்சுரமும் நேர்மைத்திறமும் அவளுடைய கனவுகளை வாழவைக்கும் என்ற தன்னம்பிக்கை கொண்டவன் நான். ஏனென்றால், நான் அல்லியின் இதயத்தை, நினைவை, குறிக்கோளை, கனவைப் பூரணமாகப் படித்து அறிந்தவன் அல்லவா?

பூவை எஸ். ஆறுமுகம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/169&oldid=1389285" இலிருந்து மீள்விக்கப்பட்டது