பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

வேறுள குழுவை எல்லாம்
மானுடம் வென்றதம்மா!

என்றே ஆர்ப்பரிக்கிறான். இப்படி சுக்ரீவன் கண்டு, நோக்கித் தேறியதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் நிரம்பவும் அருமையாகக் கூறுகிறார்.

கம்பர் சொல்லும் கதையை விட்டு விடலாம். அவர் சொல்லும் இந்த மூன்று பாட்டுகளுக்குள் ஒளிந்து கிடக்கும் உண்மையை மட்டும் பார்க்கலாம். இந்த உலகத்திலே சிலர், கண்ணால் காண்டதை மட்டுமே உண்மை என ஒத்து கொள்கிறார்கள். அவர்கள் காட்சிக்கு அப்பாற்பட்ட அத்தனையையும் பொய் என ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள்.

இன்னும் ஒரு சிலர், கண்ணால் காண்பதை விட அறிவால் அறியும் விஷயங்களும் உண்டு. அவைகளும் நல்ல உண்மைகள் தாம் என்று முன் சொன்னர்களை விட இன்னும் ஒரு படி மேலே செல்கிறார்கள். இவர்கள் நிலை உயர்ந்ததுதான்.

ஆனால் இந்த நிலைக்கும் அப்பாற்பட்டதும் ஒன்றிருக்கிறது. கண்ணால் காண்பதையும், அறிவால் அறிவதையும் விட, இறை அருளாலே தேர்ந்து தெளியும் நிலையும் ஒன்று உண்டு. அந்த நிலையில்தான், கண்டு அறியாதவற்றையும் கண்டு விடுகிறார்கள் பலர். கடவுளைக் காண்பது எளிதல்ல தான். ஆனாலும் அவன் அருளே கண்ணாகக் காணும் பேறு பெற்று விட்டால், கண்டு அறியாதவற்றையும் கண்டு விடலாம். 'கண்டறியாதன கண்டேன்' என்று அற்புதமாகப் பாடியும் விடலாம். அப்படிப் பாடியவர் அப்பர் அடிகள்.