பக்கம்:ஆண் சிங்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆண் சிங்கம்

மில்லையே! வள்ளி அம்மைக்கும் அவர் பேச்சுப் பிடிக்க வில்லை.

‘இங்கே யாரும் பாப்பா இல்லே. ஆமா...நான் காசு குடுத்திருக்கேனாக்கும்’ என்றாள், சற்று சினத்தோடு.

கண்டக்டர் முன்வந்தான். ‘இவங்க பெரிய அம்மா ஆச்சுதுங்களே. பாப்பா வந்து தனியாக டவுனுக்குப் போகக் காசு எடுத்துக்கிட்டு வரமுடியுங்களா? என்றான்.

வள்ளி அம்மை அவனை கோபமாகப் பார்த்தாள். நான் ஒண்னும் அம்மா இல்லே. ஆமா...நீ இன்னம் எனக்கு டிக்கட் தரலே’ என்றாள்.

‘ஆமா’ என்று அவள் தொனியில் அவன் உச்சரிக்கவே மற்றவர்கள் சிரித்தார்கள். அவளும் சிரித்தாள்.

அவன் டிக்கட்டைக் கிழித்து அவளிடம் கொடுத்தான். ‘ஜோரா ஸீட்டிலே உட்காரு. நீ தான் காசு கொடுத்திருக்கிறியே. ஏன் நிற்கணும்?’ என்றான்.

‘உங்கிட்டே ஒண்னும் கேட்கலே...ஆமா என்று தலையைத் தோள்மீது இடித்தாள் வள்ளி. உட்கார்ந் தாள்.

‘நின்றால், பஸ் ஆடுற ஆட்டத்திலே நீ தவறி விழ நேரலாம். மண்டை உடையலாம். அதுக்காகத் தான், பாப்பா...’

‘நான் பாப்பா இல்லேங்கிறேன், நீ என்னா? எட்டு வயசுப் பொண்ணு மாதிரியா இருக்கும் பாப்பா? என்று வெடுவெடுத்தாள் அவள்.

‘ஆமா! எட்டு வயசு ஆயிட்டா அவங்க பெரியவங்களாக வளர்ந்துடுவாங்க என்பது தெரியலியே, நீங்க என்னா ஸார்...’ என்று கண்டக்டர் சொன்னான். அவன் பஸ்ஸை நிறுத்தி, வேலையைக் கவனிக்க வேண்டியிருந்ததால், தொடர்ந்து பேசமுடியவில்லை.

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/57&oldid=1072156" இலிருந்து மீள்விக்கப்பட்டது