பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


உரையாடல்களும் தமிழர் மனத்தை மிகவும் புண்படுத்துவனவாக உள்ளன. பொதுவாகத் தொடக்கத்திலிருந்தே இடையிடையே உள்ள உரையாடல்கள் தமிழின மக்களை - திராவிட இன மக்களைக் கீழ்மைப்படுத்துவனவாகவே அமைந்து உள்ளன.

குறிப்பாகச் சென்ற கிழமை, 6:3-88இல் ஒளிபரப்பான காட்சியில், இந்திரசித்து, இராவணன் அவையில் நடந்துகொண்ட காட்சிகளும், பேசிய உரையாடல்களும் இராவணனையும், அவன் அவையினரையும் மட்டும் இழிவுபடுத்தவில்லை; தமிழினத்தையே அவமதிப்பனவாகவும் இழிவுபடுத்துவனவாகவும் அமைந்திருப்பதைக் காண, கேட்க மனம் மிகவும் புண்பட்டுப் போனது.

கதைப்படியே எடுத்துக்கொண்டாலும், இராவணன் மிகப் பெரும் வீரன். கோழை உணர்வு கொண்டவனல்லன். நேர்மையாளன். ஒழுக்கத்தில் சிறந்தவன். அவன் தெய்வத்திற் கிணையாக வைத்துப் போற்றப் பெற்றவன், இலங்கேசுவரன் இராவனேசுவரன் என்றே அவன் புகழப்பெறும்படி வாழ்ந்திருக்கின்றான்; யாரினும் அவன் இறைப்பற்றாளன், தென்னாட்டுக்கே உரிய அறிவு மதமாகிய சிவனிய மதத்தைச் சார்ந்தவன்; நேரடியாகப் போரிலோ அறிவிலோ அவனை அவன் காலத்தில் வெல்லுவதென்பது யாராலும் முடியாததாகவே இருந்தது; மிகப்பெரும் இசைத்துறை வல்லுநன்; இறையருள் பெற்றவன்; சிவனை நோக்கி எவருமே செய்ய இயலாத பெரும் தவமியற்றி அரிய ஆற்றல்களைப் பெற்றிருந்தான் என்று வால்மீகியே குறிப்பிடும் அளவுக்கு அவன் பெருமை அளவற்றது. அத்தகைய ஆற்றல் வாய்ந்த மாபெரும் திராவிட மாவீரனை, இராமன் என்னும் ஒரு கோழை பல சூழ்ச்சிகளால் வென்றான் என்பதே கதை!

இவ்வாறான அறிவும் திறமும் வீரமும், அரிய ஆற்றல்களும், கலை, பண்பாடுகளுளம், ஒழுக்கமும் சான்ற அவனை, ஒரு மிகப் பெரும் கோழையாகவும் ஒழுக்கக் கேடனாகவும் தொலைக்காட்சி இராமாயணத்தில் காட்டப் பெறுவது கொடுமையிலும் கொடுமை! எந்த மானமுள்ள தமிழனும் பொறுத்துக் கொள்ள இயலாதது.

மேலும் இராமாயணக் கதை என்பது எங்கோ, எப்பொழுதோ, நடந்த ஆரிய திராவிட இனப் போரையே அடிப்படையாகக் கொண்டதென்பதும், அதில் வரும் வாலி, சுக்கிரீவன், அநுமன் முதலிய வானரக் கூட்டம் என்பது திராவிட அஃதாவது தமிழினத்தவர்களே என்பதும், வீடணன் முதலியவர்கள் தமிழினத்தவரை ஆரியர்க்குக் காட்டிக் கொடுத்த வஞ்சகர்களே என்பதும், சவகர்லால் நேரு உள்ளிட்ட வரலாற்றுப் பேராசிரியர்கள் அனைவரும் ஒருமுகமாகக் கருத்தறிவித்த