உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 க யார் உழைப்பு - ஒரு உருவம் பெற்று அது ஓடி ஆடி, வேலை செய்துகொண்டிருக்கும், அதிசயத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா! - பார்க்கவில்லையானால் ராமசுப்பை யாவைப் பாருங்கள் - அந்த உழைப்பு பெற்ற உ ருவந்தான் அவர். தொண்டருக்குத் தொண்டர் என்று யாரோ எவ்வப்போதோ வர்ணிக்கக் கேட்டிருக்கிறோம். யாரையோ பற்றி! அது உண்மையோ பொய்யோ தெரியாது - இதோ உண்மையின் ஒளி காரைக்குடி ராமசுப்பையாவை நம்முன் காட்டுகிறது. அவர் கோடை யிலே இளைப்பாற்றிக்கொள்ளும் குளிர்தரு - தருநிழல் - நிழல் தந்த சுகம். திருச்சி சிறைச்சாலையிலே நாங்கள் நானூறுக்கு மேற்பட்டோர் அமைத்த ராஜ்ஜியத்திற்கு அவர்தான் உணவு மந்திரி. தாயுள்ளம் படைத்தவர் - பேயுள்ளமும் இரங்கும்படி பேசுபவர் - இன்று நேற்றல்ல - என்றைக்கோ - என்னை மட்டுமல்ல; இயக்கத்தின் முன்னனி வீரர்கள் அனைவ ரையும் கவர்ந்தவர். அவருடைய தலைமையிலே சென்ற களத்திலே எங்களைப் போலவே அறப்போர் புரிந்து அதிகார வர்க்கத்தினரால் பிடிக்கப்பட்டது. படை - அவர்கள் எங்களுடன் வந்து கலந்தனர். அந்த இரு பத்தைந்து பேரிலே - முதலில் எங்களிடமிருந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டரால் பிரிக்கப்பட்ட பதினாலு தோழர்களும் இருந்தனர். போலீஸ்ஸ்டேஷனில் எங்கள் ஐவரை (கருணாநிதி - சத்தி - கஸ்தூரி- குமாரவேல்-குழந்தைவேல்) தனியாகப் பிரிக்கப்பட்டு, உட்காரவைக்கப்பட்டோம். மற்ற 31 பேர்களும் ராமசுப்பையா உட்பட தனியாகப் பிரிக்கப்பட்டனர். -