இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பெண்மைக்கழகு
பெண்ணுக்கு அழகுநல் தாய்மை - அதைப்
பெற்றிலளேல் அது நோய்மை,
பெண்ணேநல் பிள்ளைகள் பெற்று - நின்
பேரன்பு மார்பிடைப் பற்று.
செவிலியர் கையில் தராதே - தந்தால்
சேயும் நன்கு வளராதே;
குவிந்த மலரிணைப் பின்றேல் - சுடர்
கொள்ளா விளக்கதுவன்றோ?
தோழியரிடம்நீ கொடுத்துப் - பிள்ளைத்
தொல்லை குறைந்ததாய் விடுத்து,
வாழ நினைத்திடல் வேண்டா - பிள்ளை
வளர்ச்சியினை அது தூண்டா.
பிற்காலத்துங்களின் பிள்ளை - பெறும்
பேறில்லை, வாழ்விலே நொள்ளை;
சிற்றுண்டிச் சாலையில் உண்டு - நோய்
சிதைத்திடச் சாவானே மண்டு.
79