பக்கம்:இசைத்தமிழ்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#91 என அப்பரடிகள் தில்லைச் சிற்றம்பலவனை யிறைஞ்சிக்கூறும் இவ்வேண்டுகோள், இறைவன்பாற் பத்தி செய்தற்கு இன்றியமையாத எளிய சாதனம் பாடும்பணியே என்ற இவ்வுண்மையினை நன்கு வலியுறுத்தல் காணலாம். திருக்கோயில்களில் திருவலகிடுதல், மெழுகுதல்' நறுமலர் மாலை தொடுத்தல் என்ற இச்சரியைச் தொண்டு கள் ஒன்றினுக்கு ஒன்று பத்துமடங்கு மேற்பட்ட நற்பயன் களைத் தருவன. திருக்கோயிலில் திருவிளக்கிடுவோர் உண்மை நெறியாகிய சிவஞானத்தைப் பெறுவர். இறை வனது மெய்ப்புகழை விரித்துரைக்கும் இன்னிசைப் பாட லாகிய கீதத்தை மிகப்பாடும் அடியார்களுக்கு இறைவன் அருளுந்திறம், மேற்குறித்த தொண்டுகளால் விளையும் நற் பயன்களைக் காட்டிலும் அளவற்றனவாகும். இத்தகைய திருத்தொண்டின் பயன்களை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, ‘விளக்கினர் பெற்ற இன்பம் மெழுக்கினற் பதிற்றியாகும் துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண்ணேற லாகும் விளக்கிட்டார் பேறுசொல்லின் மெய்ந்தெறி ஞானமாகும் அளப்பில் கீதஞ்சொன்னுர்க்கு அடிகள்தாம் அருளுமாறே’ எனவரும் திருநேரிசையாகும். இதன் ஈற்றடியினை 'கீதஞ்சொன்னர்க்கு அடிகள் அருளுமாறு அளப்பில: என இயைத்துப் பொருள் கொள்க. (தாம்-அசை) இனி, இத்திருப்பாடலில், திருவலகிடுதல் முதலிய பணிகளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/201&oldid=745057" இலிருந்து மீள்விக்கப்பட்டது