பக்கம்:இசைத்தமிழ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வலிவும் மெலிவும் சமலும் வரையறையும் நீர்மையும் என்னும் பதினெரு பாகுபாட்டினுைம் அறிந்து, அறிந்தவண்ணம் அவன் தாளநிலையில் எய்தவைத்த நிறம் தன் கவியி னிடத்தே தோன்றவைக்க வல்லய்ை" என அடியார்க்கு நல்லார் விளக்கியுள்ளார். இதன்கண் பண் என்பது, முதல், முறை, முடிவு நிறை, குறை, கிழமை, வலிவு, மெலிவு. சமன், வரையறை, நீர்மை என்னும் இப் பதிளுெரு பாகு பாட்டிருலும் ஆராய்ந்தறியப்படும் இலக்கணங்களையுடையது என்னும் உண்மையினிது புலளுதல் காணலாம். வடமொழி யில் இராகங்களுக்கு உரியனவாக, கிரகம், அம்சம், மந்தரம், தாரம், நியாசம், அபந்யாசம், சந்யாசம், விந்யா சம், பகுத்வம், அற்பத்வம் எனப் பத்திலக்கணங்கள் கூறப்பட்டன என்பர். இசைத் தமிழ்நூலில் முதல்’ என்பது, இசைப்பாட்டின் முதலில் எடுக்கும் சுரத்தைக் குறிக்கும். இதனைக் கிரகம் என்பர் வடநூலார். கிழமை என்பது, பலமுறை, வருதற் குரிய சுரமாகும். இது வடமொழியில் அம்சம் என்றும் ஜீவசுரம் என்றும் வழங்கும். கீதத்தை முடிக்குஞ் சுரத்தை 'நியாசம் எனவும், இராகத்தின் இடையிலுள்ள முடிவைச் செய்யும் சுரத்தை அபந்யாசம் எனவும், கீதத்தினது முதற்பகுதியின் இறுதியிலுள்ள சுரத்தைச் சந்யாசம் எனவும், கீதப்பகுதியின் முதற்கூற்றின் இறுதியிலுள்ள சுரத்தை விந்யாசம் எனவும் வழங்குவர் வடநூலார். மேல் நால்வகைப்படக் குறித்த முடிக்குஞ் சுரங்களை யெல்லாம் முடிவு என ஒன்ருக அடக்கிக் கூறுவர் இசைத் தமிழ் நூலார். தமிழில் நிறை, குறை, மெலிவு, வலிவு என வழங்குவனவற்றை முறையே பகுத்வம், அற்பத்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/47&oldid=745099" இலிருந்து மீள்விக்கப்பட்டது