இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வண்டிக்காரன் அதோ பாரடி அவரே என் கணவர்- அதோ பாரடி புதுமாட்டு வண்டி ஓட்டிப் போகின்றார் என்னை வாட்டி! அதோ பாரடி! காதல் பகுதி இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி, ஏறுகால் மேல் தானென் சர்க்கரைக் கட்டி தெரிய வில்லையோடி தலையில் துப்பட்டி? சேரனே அவர் என்றால் அதில் என்ன அட்டி? அதோ பாரடி! ஐந்து பணத்தினை உன்னிடம் தந்தார் அடிசாயும் முன்னே வரவு மிசைந்தார் அந்தி வராவிட்டால் பெண்ணே இந்தா '"ஆசைமுத்தம்" என்று தந்து நடந்தார்! அதோ பாரடி!