பக்கம்:இசையமுது 1, 1984.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாண்டியன்மேற் காதல் பாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனாண்டி. பாண்டியன் என் சொல்லை... ஈண்டு மயலில் நான் தூண்டிலில் மீனாய் மாண்டிட விடுத்தே வேண்டிட வேண்டிட, பாண்டியன் என் சொல்லை... தமிழிசைப் பேச்சும், செங்கோ லோச்சும்; தடக்கை வீச்சும், காதலைப் பாய்ச்சும்; இமைப்பினில் ஓடி அவனைத் தேடி என்னகம் நாடி வாடி போடி பாண்டியன் என் சொல்லை... பிரிந்திடும் போது நெஞ்சு பொறாது; வரும்போது பேசா திருக்க ஒண்ணாது எரிந்திடும் சினத்தில் எதிர்வரு வானேல் என்னுயிர் தாளிடும் அன்னவன் மேல் பாண்டியன் என் சொல்லை... இசையமுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/41&oldid=1443350" இலிருந்து மீள்விக்கப்பட்டது