பக்கம்:இதய உணர்ச்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இசையரசு
திரு. எம். எம். தண்டபாணி தேசிகர்.

அனுபவ உரை

உலகமென்பது உயர்ந்தோர் மாட்டே என்ற உண்மைக்கு இணங்க, அறிவு, ஒழுக்கம், அன்பு, அறம் ஆகிய பெரும் பண்புகளையுடைய சான்றோர்கள் எந்தக் காலத்திலும் இருந்து வருவதினாலேதான் மக்கள் இனமானது ஒப்பற்ற தனிப் பெருமையுடையதாகக் திகழ்ந்துவருகின்றது.

செயற்கரிய செய்வர் பெரியர்,—சிறியர்
செயற்கரிய செய்கலாதார்.

செயற்கரிய செய்வதினாலேயே இவர்கள் பெரியார் எனப்படுவர். இவர்கள் நாடு, மதம், மொழி என்னும் வேறுபாடு எதுவும் அறியார். இவர்களுள் ஒருவராகிய நாவுக்காசர் "எல்லா உலகமும் ஆனாய் நீயே" என்று இறைவனை இசைத் தமிழால் துதித்துப் போற்றுகின்றார். அது போன்று பெரியோர் அனைவரும் ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற ஒருமைப் பண்புடைய இயற்கை மன மாண்பைப் பெற்றவர்களாவர்.

அவர்கள் அன்பு அறம் என்ற அரண்களைக் கண்ணே போல் காத்து வருவார்கள். மக்களினமானது அவ்வரண்களை அழிக்கும்போது, அப்பெரியார்கள் சமுதாயத்தின் உயிர் நாடியாக, நாகரீகத்தின் சின்னமாக, நாட்டின் ஜீவ சொத்தாகத் தோன்றி நாடு நலமுறவும், ஒழுக்கம் உயர்வு பெறவும் ஆவன செய்து வருகிறார்கள்.

நமது தமிழ் நாட்டிலும், நாமும் நம் தமிழ் மொழியும் செய்த பெரும் தவத்தால் வள்ளுவர் இளங்கோ போன்ற பேரறிஞர்கள் தோன்றி. நமக்கு அறவுரைகளைப் பொழிந்து நம்மைப் பாதுகாத்து வருகிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இத்தாலி நாட்டை ஆண்ட மார்க்க ஔரேலிய மன்னர் அத்தகைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/10&oldid=1105426" இலிருந்து மீள்விக்கப்பட்டது