நிறைபுகழ் எய்திய உரைவேந்தர்
119
செல்வமாகும். நூலுரை-திறனுரை- பொழிவுரை என முவ்வரம்பாலும் தமிழ்க்கரையைத் திண்ணிதாக்கிய உரை வேந்தர் ஔவை துரைசாமி நெடும்புகழ் என்றும் நிலவுவதாக!”
என்று போற்றிப் புகழ்கின்றார்!
“சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குத் துணைபுரிந்தவர் ஔவை துரைசாமி அவர்கள். தம் காலத்து மக்களிடம் தமிழ் சிறந்தோங்க உழைத்தவர்”
என்று முன்னாள் துணைவேந்தர் சை.வே.சிட்டிபாபு பாராட்டுகின்றார்.
“ஆசிரியப் பணியாலே இளைய ரெல்லாம்
அறிவோடும் ஆற்றலொடும் வாழ வைத்தார்!
பேசுகின்ற திறனாலே தமிழர் நெஞ்சில்
பிறங்குமொரு தனியிடத்தில் அமர்ந்து கொண்டார்!
நேசமிகும் உளத்தாலே எந்தப் போதும்
நீலமணி மிடற்றானைத் தொழுதி ருந்தார்!
வாசமுறு நற்றமிழே உயிராய் எண்ணி
மாசறியாப் பொன்னேபோல் வாழ்ந்தி ருந்தார்!”
என்பது திருமதி செளந்தரா கைலாசத்தின் புகழ்க் கவிதை.
“எழுத்தினொடு பேச்சாலும் இனியதமிழ்
சிவநெறியென் றிரண்டும் எங்கும்
முழக்கிவரும் நாவலனே! முடுக்குமிகு
தமிழ்வீறு முதிர்ந்த வீர!”
என ந.ரா. முருகவேளும்,
“வாயில் தமிழ்முழக்கம் வாழ்வில் தமிழியக்கம் பாயில் துயில்போதும் பைந்தமிழே-நோயில் படுப்பினும் பண்டமிழின் பண்பார் பணிசெய்து
எடுத்ததுரை சாமிபுகழ் ஏற்று!”
எனக் கவிஞர் தி.நா அறிவொளியும்,