இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்திர மோஹனா
33
சற்றுப் பொறுத்துத் தெளியும். மேல் ஆக வேண்டிய காரியங்களைப்பற்றிக் கேட்பதற்குக்கூட நா எழவில்லை. எதற்கும் சற்றுப் பேசாமலிருங்கள். தானாகவே தெளிந்து எழுந் திருக்கட்டும்.
தேவகி:- ஹா மைந்தா ! இந்நேரம் எங்குச் சென்றாய்? என் கண்ணே! என்னருகில் உட்காரு.
நீலா:- ஹா ! என்ன துயரம்? மூர்ச்சித்துக் கிடக்கிற போதுகூட வாய் பிதற்றுகிறாரே! இனி இளவரசரை எங்குக்காணப்போகிறார்?
ஜய :- இனி, தெளிந்துவிடும். பேசாதே யிருங்கள். (மூவரும் ராணியார் பக்கலில் நிற்க, திரைவீழ்தல்).
மூன்றாவது களம் முற்றிற்று.
இரண்டாவது அங்கம். முதற் களம்.
இடம்:- மோஹனாவின் அந்தப்புரம்.
காலம்:காலை.
(மோஹனா ஆசனத்தில் வீற்றிருந்தபடி பாடிக்கொண்டே பிரவேசம் .)
(ஸரஸ ஸாமதான மென்றமெட்டு.)
ராகம்: காபி நாராயணி; தாளம்: ஆதி.
பல்லவி
.
ஸகல லோக நாதா! ஸௌமித்ரி ப்ராதா!
தசரத சுதா ! காத்தருள் பிதா!
அநுபல்லவி
.
3
(ON)