பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

33


வாழும் பிராகுவியர் என்பார் வழங்கும் மொழியும் இன்னும் இங்ஙனமே இமயமலைச் சாரலிலும் பிற வட நாடுகளிலும் வழங்கும் பலவேறு மொழிகளும் பண்டைத் தமிழ் மொழியின் திரிபுகளாய் இருத்தலை நடு நின்று நன்கா ராய்ந்து கண்ட கால்டு வெல் முதலான மேல் நாட்டாசிரி யர்கள், மிகப்பழைய காலத்தே இவ்விந்தியதேயம் முழுதும் பரவியிருந்தவர்கள் தமிழ் மக்களேயாவ ரென்றும், அவர் வழங்கியவை தமிழுந் தமிழின் திரிபான மொழிகளுமே யாகுமென்றும் முடித்துச் சொல்லியிருக் கின்றார்கள். இஞ்ஞான்று இவ்விந்தியதேயம் எங்கணும் வைகி உயிர்வாழுந் தமிழருந் தமிழரோடு இனமான மக்களும் ஆறரைக் கோடிக்கு மேற்பட்டவராவர் என்பதும் அவராற் கணக்கிடப் பட்டிருக்கின்றது. இவ்விந்திய தேயம் முழுதுமுள்ள மக்களின் தொகை முப்பது கோடி யாகும். தமிழ் பொதுமொழியாகாத காரணம் இங்ஙனந் தமிழ்மொழி யானது, ஆறரைக்கோடி இந்து மக்கட்குப் பொது மொழியாயும், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தொட்டு இன்றுகாறும் வழங்குந் தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்த தனித் தலைமை மொழி யாயும், வேறெந்த மொழிகளிலுங் காணப்படாத தொல் காப்பியம், திருக்குறள், திருவாசகம், சிவஞானபோதம், திருத் தொண்டர் புராணம் முதலான ஒப்புயர்வில்லா இலக்கண இலக்கிய நூற் பெருஞ்செல்வம் வாய்ந்த மொழியாயும் விளங்குவதாயிருந்தும், இஃது இவ்விந்திய தேயத்திற்குப் பொதுமொழி யாகாமல் நிற்பது பெரியதொரு புதுமையா யிருக்கின்ற தன்றோ? இதற்குக் காரணந்தான் என்னை யென்பதைச் சிறிதாராய்ந்து பார்ப்பாம். இப்போது உலகம் எங்கணும் பரவி வழங்கும் ஆங்கில மொழியின் றன்மையினை ஆராய்ந்து பார்மின்கள்! ஆங்கில மொழிக்கே உரிய வெள்ளைக்கார நன்மக்கள் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து என்னும்