பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் வாழ்த்து


நீரார்ந்த உலகமிதில் நிலைத்திருக்கும் மொழிகளுள்ளே
சீரார்ந்த முதல்மொழியாம் சிறப்புறுநல் தமிழ்மொழியே!

உன்னுடைநல் உருமாறி ஒருமொழிநீ பலவானாய்
உன்னுடைய நிலப்பகுதி உயரளவு குறைந்ததுவே.

செந்தமிழே பைந்தமிழே சிலர்நாங்கள் உள்ளோம் நீ
நொந்தழிய விடமாட்டோம் நோன்புகொண்டோம் - வளர்த்திடவே.

ஆளுவோரின் உதவியின்றி அறிவுமிகு பலபுலவர்
சாலவுனை வளர்ப்பரிந்நாள் சான்றுபல இதற்குமுண்டே.

தாயோடு தெய்வமும் நீ தக்கபெருஞ் செல்வமும்நீ
சேய்நாங்கள் உனதுபணி செய்துநனி போற்றுதுமே.

தேனெனவே மிகஇனிக்கும் தீந்தமிழே தெள்ளமிழ்தே
வானளாவ உலகளந்து வாழ்கஎன வாழ்த்துதுமே!

சுந்தர சண்முகனார்