பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இனியவை நாற்பது

கடவுள் வாழ்த்து

(செய்யுள்)


கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந்து ஏத்தல் இனிது.

(உரை)

மூன்று கண்களுடைய சிவன் திருவடிகளைச் சேர்ந்து வணங்குதல் மிகவும் இனியது. பண்டு தொட்ட மாட்சிமை யுடைய துளசி மாலை அணியும் திருமாலை வழிபடுதல் இனியது. நான்கு முகங்களுடைய பிரமனை அடைந்து தங்கி முதன்மையாகப் போற்றித் தொழுவது இனியது.