பக்கம்:இன்றும் இனியும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 ல் அ.ச. ஞானசம்பந்தன் நாடோறும் உய்வழியின்றி வருந்துந் தமிழர்க்கு என்றுங் கலங்கரை விளக்காய் நின்று உதவுவது புறநானூறு என்பதும் வெள்ளிடைமலை. இத்தகைய அருநூலைக் காட்சியளவிற் கண்டு மகிழாது, தமிழனெனத் தருக்கி வாழும் ஒவ்வொருவனும் இதனைத் தவறாது கற்றல் வேண்டும் என்றுங் கூறி, இதனோடு இச் சிறு கட்டுரையை முடித்துக்கொள்கின்றேன்.