இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
யோசித்துப் பார்! 43 கல்லுக்கு ஆயிரம் வேலி ஆலயத்தில் உண்டு நண்பா! புல்லுக்கும் பயனில்லை புலம்புகின்றார் ஏழை மக்கள் பல்லிடுக்கால் ஒரு வார்த்தை பாரத வீரா! மாணவர் எழுச்சி. சேரர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே? வீரர் பாண்டியன் அரசேன் கவிழ்ந்தது? சோழர் உலவிய சோர்விலா நாட்டில் கோழைக் கொள்கை குவிந்த தெவ்விதம்? வெடித்தன வினாக்கள் வெதும்பிய மனத்தில் குடித்திடுவோம் உயிர்! கொடுத்திடுங்கள் நாட்டை! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் நரிகளின் ஊளை! நாட்டு வெறி பிடித்த காளைகளே! கிலிபிடித்த மனிதர்களைக் கீறியெறியுங்கள்! புலி வாழ்வின் உச்சியிலே புதுமைதனைப் பொறித்திடுவோம். 1-