உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன முழக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இன்னுமா கூச்சல்? காவிரியின் கரையினிலே பெண்ணையின் பாய்ச்சலிலே சரிதமில்லை! சரிதமில்லை ! ஐயகோ தமிழ்நாடே! ஆரம்பம் கங்கையிலாம் பாண்டியர் ஆண்டதை யார் கண்டார்? சேரர் செழிப்பைச் செதுக்கிய தெவர்? சோழர் வளப்பம் சொன்னதுமுண்டோ? செருப்பாண்ட கதைதான் சரிதத் தொடக்கம்! மறுப்பவரெல்லாம் மானம் விற்றார். மாற்றியமைத்திட மாணவர் வந்தார்! பளிச் செனப் பாய்வர் பாசறை வீரர்! இளித்தவாயரே! இன்னுமா கூச்சல்? வருணமா? மரணமா? ம பரணி பலபாடிப்:பாங்குடன் வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில் சொரணை சிறிதுமிலாச் சுய நலத்துச் சோதாக்கள் சில கூடி வருணத்தை நிலை நாட்ட வகையின்றிக் கரணங்கள் போட்டாலும் மரணத்தின் உச்சியிலே மானங்காக்க மறத் தமிழா போராடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/49&oldid=1701774" இலிருந்து மீள்விக்கப்பட்டது