உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

57 109 மு. கருணாநிதி திருசங்கு: இங்கு வரமாட்டான். திரவு என்ன தெரியுமா?... பாளையக்காரர் உத் சுகதேவன், உன்னைத் தூக்கிப்போய் கல்யாணம் செய்திட முடிவு செய்திருக்கிறான். அதிலிருந்து தப்புவதற்கு, உடனே நாமிருவரும் ஆனந்தபுரம் என்ற ஊருக்கு செல்லவேண்டும். அங்கே முத்தன் வருவான். உங்கள் திருமணம் முடிந்துவிடும். எல்லா ஏற்பாடுகளையும் உன் நன்மைக்காக பாளையக்காரரே கவனிக்கிறார். முத்தாயி: அப்பா!.. என்னையே என்னால் நம்பமுடிய வில்லை. இந்த இன்பமான செய்தியைக் கொண்டு வந்த உங்களை வணங்குகிறேன். நான் ஏதாவது வேகத்தில் பேசியிருந்தாலும் மன்னித்துவிடுங்கள் ! திருசங்கு: சரியம்மா ! உடனே ஆனந்தபுரம் புறப்பட ஏற்பாடுகளைக் கவனிப்போம். முத்தாயி: வேறு என்ன வேலையப்பா அதைவிட எனக்கு! புறப்படத் தயாராகிறார்கள். வண்டியும் வாசலில் வந்து நிற்கிறது. முத்தாயி களிநடனம் புரிந்தபடி காதலனைக் காண பயணமாகிறாள்.