உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணா நிதி வைத்தியர் பூபதியை அழைத்து வாருங்கள்' என்று கட்டளையிடுகிறார்.ஆட்களும் ஓடுகிறார் கள். 66 பூபதியின் வீட்டிலே ஆட்கள் போய்க் கூப் பிடுகிறார்கள். இருபது வருஷமாயிற்றப்பா அந்த அரண்மனையில் நுழைந்து ! ' என்று கூறிக்கொண்டே பூபதி புறப்பட்டு விடுகிறார். பூங்காவனம் கட்டிலில் கிடத்தப்பட்டிருக் கிறாள். பூபதி வந்து அவளைப் பரிசோதிக்கிறார். பரிசோதனை முடிந்ததும்- "பயப்படாதீர்கள் மன அதிர்ச்சிதான்!" என்று சொல்லிவிட்டு ஏதோ சில மருந்துகளை அவள் மூக்கில் காட்டு கிறார். பூங்காவனம் கண் விழிக்கிறாள். 89 173 பூபதி: பிரபூ! ஏன் இப்படி திடீரென்று மயக்கம் வந்தது. ஏதாவது சோகச் செய்தி? பலதேவர்: அப்படி யொன்றுமில்லை, நமது மாளிகையில் குதிரைக்காரனா யிருந்தானே அந்த முத்தனுக்கு தூக்கு தண்டனையாம் அதைக் கேள்விப் பட்ட வுடன். 0.00a 66 பூங்காவனம் மறுபடியும் முத்தா" என அலறுகிறாள். பூபதியின் மூளை மிகவேகமாக வேலை செய்கிறது. பலதேவரைப் பார்த்து- பூபதி: இந்த மாளிகைக்கு பின்புறமாக படிக்கட்டுகள் இருக்கிற தல்லவா ?...... பலதேவர்: இருக்கிறது!..