உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 34 63 அவன்: அப்ப, யுத்த மந்திரியாகக்கூட வரலாம். வெற்றிவேலன்: ஆமா ஆமாம்!... சரி ! இப்போது உங்களையெல்லாம் படையில் சேர்த்தாகி விட்டது. நீங்களும் கையொப்பம் செய்து விட்டீர்கள். சேர்ந் தவர்கள் யாராவது நாளைக்கு விலக வேண்டுமென்று நினைத்தால் நூறுபொன் தண்டம், செலுத்த வேண்டும். - வீரப்பன்: நாங்க, எதற்கு விலகப் போகிறோம். வெற்றிவேலன் : சந்தோஷம், நீங்கள் எல்லாம் இப் போது போகலாம். விரைவில் வேங்கைபுரம் போக வேண்டியிருக்கும். தயாராயிருங்கள். எல்லோரும் தளபதியை வணங்கிவிட்டுப் போகிறார்கள். வெற்றி வேலன், வேதாளத்தை பார்த்து வெற்றிவேலன்: வேதாளம்! இன்று படையில் பத்து பேரை சேர்த்திருக்கிறீர். இல்லையா! வேதாளம்: ஆமாம். வெற்றிவேலன்: இந்தாரும், [பொன் நாணயங்களைத் தருகிறான்] வேதாளம் அதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு, வேதாளம்: பொன் இருக்கட்டும் பொன்! உங்கள் பூரண தயவு இருந்தால் போதும். பிறகு... நான் வரட்டுமா.