உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 இரத்தக் கண்ணீர் காட்சி 22] (திருசங்கு வீடு முத்தாயி சுமதி, வரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முத்தாயி: இந்நேரம் அவர் போய் சொல்லியிருப்பார்; படையிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று! சுமதி: அவர் சொல்லாவிட்டாலும் உன்னுடைய சுந்தர வதனம், அவரை சொல்லவைத்திருக்குமே! முத்தாயி: ஆரம்பித்துவிடாதேயம்மா! அப்பா வரும் நேரமாகிவிட்டது !... இந்தா சுமதி, ஜாக்கிரதை. [நூறு பொன் கொண்ட பையை அவளிடம் கொடுக் கிறாள்] காலையில் அவரிடம் சேர்த்துவிடு! அவர் எங்கே யிருக்கிறார் தெரியுமல்லவா? சுமதி: தெரியும். முத்தாயி: எங்கே? சும மதி: உன் இருதயத்தில் முத்தாயி: விளையாடாதே சுமதி அஞ்சல் மனையில் தான் அவர் இருப்பார். அவர் இல்லாவிட்டாலும் வேதாளத்திடம் கொடுத்து, அவரிடம் கொடுத்து விடச் சொல்லு!... சுமதி: உத்திரவுப்படியே!... முத்தாயி: சரி போய்விடு - அப்பா வந்துவிடுவார்.