பக்கம்:இரவு வரவில்லை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. கேட்டதுண்டோ?


முல்லை நறுங்கொடியே!-உன்னிடம்
சொல்லவா? வேண்டாமா?
நல்லது என்பாயோ?-என்காதல்
எள்ளிச் சிரிப்பாயோ?
1


நீரை மறந்த மீன்கள்,-வெண்
நிலவை மறந்த அல்லி,
காரை மறந்த செந்நெல்-எங்கேனும்
கண்டது கேட்டதுண்டோ?
2


சேவல் மறந்த பெட்டை,-குளிர்
தென்றல் மறந்த மக்கள்,
கோவை மறந்த கிள்ளை-எவரேனும்
கூறத்தான் கேட்டதுண்டோ?
3


கடலை மறந்த ஆறு,-நீள்
கழியை மறந்த நாரை,
சுடரை மறந்த திங்கள்-எவரேனும்
சொல்லிநீ கேட்டதுண்டோ?
4


தேனை மறந்த வண்டு,-நீலவான்
செல்ல மறந்த நிலவு,
வானை மறந்த வெய்யோன்-எங்கேனும்

பார்த்தது கேட்டதுண்டோ?
5

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/40&oldid=1179986" இலிருந்து மீள்விக்கப்பட்டது