பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 24 எஞ்சியவர்கள் கரையில் இருந்து மூன்று மைல் தொலை விலுள்ள முயல் தீவிற்குத் தப்பிச் சென்று பிழை த் தனர். அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடு ப ட ட அந்தப் பாதிரியார் படுகொலை செய்யப் பட்டார். கிறித்துவ சமய பரப்புதலுக்காக இந்த மாவட்டத்தில் இரத்தம் சிந்திய முதல்தியாகி இவர். இவரைத் தொடர்ந்து இத்தாலிய, போர்ச்சுகல் நாட்டுச் சமயத் தொண்டர்கள், இங்குள்ள மீனவர் களே மதமாற்றம் பெறுமாறு விேர பிரச்சாரம் செப்தனர். மதுரை மன்னர் திருமலைநாயக்கருக்கும் இராமநாதபுரம் மன்னர் சடைக்கன் சேது பதிக்கும் கிபி 1659 இல் நடைபெற்ற போரில், போர்ச்சுகீஸியரின் ஆயுத உதவி பெறுவதற்கு நிபந்தனையாக, பாம்பனுக்கும் தொண் டிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒன்பது கிறித்துவ ஆலயங்களை அமைப்பதற்கு போர்ச்சுகீஸியருக்குத் திருமலேமன்னர் அனுமதி வழங்கி, கிறித்துவ மத மாற்றத்திற்கு மறைமுகமாக அங்கீகாரம் செய்தார். என்ருலும், மறவர்சீமையில் மதமாற்றம் காண்பது மிக அரியதொன்ருகவே இருந்தது. அப்பொழுது, சென்னையிலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் மறவர். சீமை வழி யாக .ெ கா ச் சி க் கு ச் செல்ல முயன்ற ஆண்ட்ருரோப்பஸ், கொன்ஸ்லாவ் பேய்ஸ் ஆகிய இரண்டு பாதிரிகள் மறவர் கையில் அகப்பட்டு, பிணைத்தொகை கொடுத்தும் அங்கிருந்து மீள்வதே பெரும்பாடாகி விட்டது. என்ருலும், முப்பதாண்டுகள் கழித்து கிபி 1663 ல் அந்தோனியா-டி-பிரான்ஸா என்ற பாதிரியாரது பகீரதப் பிரயத்தனம் காரணமாக 252 இந்துக்கள்: கிறித்துவ மதத்தைத் தழுவினர். இவர்களில் இரு