பக்கம்:இராவண காவியம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 அரவாசல்பம் 10, தானெனத் தருக்கிக் கோசி தன்னொடுந் தம்பி யோடும் மாநக ரயோத்தி நீங்கி மலைகளுங் காடு நீந்தி வானை 4 டுருவிச் செல்லும் மரமடர் விந்தச் சாரல் தானடைந் ததையுந் தாண்டித் தமிழகச் சாரல்கண்டார். 11. சங்கிவர் சில நா ளே கி இடைவள நாட்டைக் கண்டு மாங்குயில் கூவப் பூவை வண்டமி மிசைத்தேன் வாக்கும் ஓங்கிய மரங்கள் சூழ்ந்த வொருமலர்ப் பொழிலில் தங்கிப் பாங்குட னியற்கைச் செந்தேன் பருகியாங் கிருக்கும் போதில். 12. ஆரிய முதியோர் தம்மா லரியவிற் றொழில்ப யிற்றி ஆரிய வடிமை யாக்கி யருந்தமி ழரசைப் போக்கி ஆரிய வடிமை யின்கீ முருந்தமி ழகத்தை யாக்கி ஆரியர் வாழ்வ தாக வாக்கவே யாக்கப் பட்டான். 13. இயக்குந ரியல்பிற் கேற்ப இயங்கிடும் பொறியே போல! இயக்குமா ரியன் னோரி னியல்புபோ லியங்கு நீரான் . பயக்குறை யொன்று மின்றிப் பகையின்றிப் பெண்ணென் றாலும் தயக்கமில் லாது கொல்லும் தசரத ராமன் எந்தாய்! 14. சந்தடர் விந்தச் சாரல் தனையிரு கண்ணால் கண்டு மைந்தனு மகிழ்ந்தே னோவாப் பல்வகை வளங்கள் மேய இந்தநன் னாட்டை. யாள்வோர் யாரவர் வரலா றென்ன விந்தக மெவர்க்குச் சொந்தம்? விளக்கமா யுரைப்பீ ரென்றான். 15. அடி. மையிவ் வாறு கேட்ப அவாவழுக் காறு சீற்றம் மடமைசெந் தண்மை யின் மை வஞ்சனை முதலா வுள்ள கொடுமைக ளெல்லா மொன் றாய்க் கட்டியோ ருருவ டிமிசை வந்தாலன்ன பாவியாண் டானுஞ் சொல்வான், மாகிப் 14. ஓவர் குறையாத.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/234&oldid=987729" இலிருந்து மீள்விக்கப்பட்டது