பக்கம்:இராவண காவியம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசரதன் தர்ச்சிப் படலம் 263 117. 'தங்கள் சொற் படியே யெந்தன் தம்பியே காடா ளட்டும் இங்கியா னிருந்தா லென்ன' என்பையேல் குடிக்க நன்பால் தங்கிய அன்பால் நாட்டைத் திருகெனப் புரட்சி செய்வர்; வெங்குறை யுடையோ னென்று வேந்தையும் பழிப்ப ரன்றோ ? 118. பெற்றபிள் ளையைப்பல் லாண்டாய்ப் பிரிந்தவ னுரிமை மற்றவன் தன்னைப் பாவி மறந்துனை மகனாக் கொண்டேன்; பொற்றுறை வளர்த்து வந்த பொருகிடாய் மார்பில் பாய்ந்த சொற்றனை நினைக்கச் செய்தென் தொடர் பையும் ம றுத்துக் கொண்டாய். 119. தன்னல மிலையேல் மக்கள் வாழ்க்கையே சலித்துப் போகும்; தன்னலம் பிறர்க லத்தைத் தடுப்பது தகவ தன்றுன் தன்னலம் பிறர்க லத்தைத் தடுத்ததால் தகர்ந்த தப்பா! தன்னலம் பொதுந லத்தின் தாயென வறிகு வாயே. 120, உள்ளத்தை யுரைக்க ராம னூ மனி னுள்ளம் வெள்ளிக் கள்ளத்தை யறிந்தா ளென்ற கவலையங் கடலில் வீழ்ந்து துள்ளித்தன் கரைகா ணானைத் தாயொடு தொழுதென் அன் னாய்! புள்ளொத்த கான ரின்றே போகிறே னென்று போனான். 121. எண்ணிய வெண்ணஞ் சிந்த இளை யதாய் சொல்லே றுண்ட புண்ணொடு போவான் றன்னைக் கண்டுமே புலர்ந்த காமக் கண்ணியர் கெடுத்தான் மன்னன் காட்டினுக் கோட்டித் தங்கள் அண்ணியன் றனையென் றேங்க; அன் கோ பா லணைந்தா. னம்மா ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/279&oldid=987774" இலிருந்து மீள்விக்கப்பட்டது