பக்கம்:இராவண காவியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • கைக்கட் படலம்

மாபெருந்தலைவன் 12, தண்டமி முகத்தை முற்றும் தனியர சாட்சி செய்யத் திண்டிற லொழுக்க மேன்மை திறம்பிடா நிலைமை வாய்ந்த தண்டமிழ் மகனைத் தங்கள் தலைவனாக் கொண்டா ரந்தப் பண்டையோன் மரபில் வந்தோர் பாண்டிய ரெனப்பட் டாரே. வேறு 13, வென்றி வேலுடை வேந்தனு மணிமுடி வேய்ந்தே அன்று தண்டமி ழகத்தினாப் பண்ண தன் முகம்போல் இன்றி லங்கையந் தீவுதென் மேற்கினி லெழிலோ டன் றி ருந்ததொன் னகரினி லமர்ந்தினி தாண்டான். 14. நானி லத்தவ ரவரவர் முறைப்படி நடக்க மேனி லத்தவர் பொருள்கொடு !மிகுபொருள் கொடுப்பத் தானி கனத்தது தமிழர்கள் நினைத்ததே யாகத் தேனி னித்தசெந் தமிழ்வளர்த் தேமுறை சிறந்தான். 15. பின்னர் நாள்பல செல்லவோர் பெருந்தலை மகனும் தன்ன குந்தலை மகனைமுத் தமிழ் தனி வளர்க்க நன்னர் மேயதென் பாலியாம் பெருவள நாட்டின் மன்ன னாக்கின னன்னனும் வண்டமிழ் வளர்த்தான், பைந்த உமிழ்வளர்த் துவக்குமப் பாண்டிய மன்னன் சிந்தை போற்செயல் திருந்தவே முறைசெய்து சிறக்கத் தந்தை தாயினும் அன்புடன் தமிழகம் புரக்கும் எந்தை மாபெரும் தலைவனு மினிதென மகிழ்ந்தான். 17, இன்ன போலவே கிழக்குமா டென்னுமவ் விடத்திற் கன் னை போலவோ ரன்புடைத் தமிழ்மகன் தன்னை மன்ன னாக்கினன் அன்னனும் வண்டமிழ் வளர்த்தான் இன் ன வன்மர பெழுந்தரே யிசையுடைச் சோழர். 13. நாப்பண்-டு. 14. மேனிலம்-மேல்நாடு. பொருள்-சரக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/55&oldid=987547" இலிருந்து மீள்விக்கப்பட்டது