பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



196 - இறையனார் அகப்பொருள் (கற்பு: 'கானங் கோழி கவர்குரற் சேவல் ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப் புதல் நீர் வாரும் பூநாறு புறவிற் சீறூ ரோளே மடந்தை வேறூர் வேந்து விடு தொழிலொடு செலினும் சேர்ந்துவரல் அறியாது செம்மல் தேரே.' (குறுந் - உசஉ) மற்றுங் கற்புக்காலத்துக் கிளவிகள் இது நிலமாகக் கொள் ளப்படுவனவெல்லாம் அறிந்துகொள்க. (20) சூத்திரம் - ருச வன்புறை குறித்த வாயில் எல்லாம் அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றிற் சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர். என்பது என்னு தலிற்றோ எனின், மேற் சூத்திரத்து ஆற்று வித்துக்கொண்டிருக்குமாறு உணர்த்திப் போந்தார், இனித், தலைமகன் பிரிவெடுத்துக்கொண்டு பிரியுமிடத்து வாயில்களுக்கு உணர்த்த, வாயில்கள் தலைமகட்குப் பிரிவுணர்த்தத் தலைமகளது வாயில்க ளாமிடத்துச் சிறைப்புறத்தானாக அவன் கேட்கும் அணிமைக்கண் உணர்த்துக என்பது உணர்த்துதல் நுதலிற்று; என்பாரும், இனித், தலைமகனது பிரிவின்கண் தலைமகள் ஆற்றாளாயின விடத்துச் சிறைப்புறங் கூறியும் ஆற்றுவிக்க என்பது உணர்த் துதல் நுதலிற்று என்பாரும் உளர். இதன் பொருள் : வன்புறை குறித்த வாயிலெல்லாம் என் பது - தலைமகளை ஆற்றுவிக்கும் வகையால் ஆற்றுவித்தற்குரிய வாயிலெல்லாம், என்றவாறு; அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின் என்பது - தலைமகன் பிரிவின்கண் தலைமகள் ஆற்றாளாயினவிடத்து, என்றவாறு; என்பது அவ்விடத்து வாயில்கள் ஆற்றுவிக்கற்பால, ஆற்றுவிக்ககில்லாதவிடத்து; சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர் என்பது - சிறைப் புறத்துக்கண்னுறுத்து ஆற்றுவிக்க எனச் சொல்லுவர் கற்று. வல்லோர் என்றவாறு. சிறைப்புறங் குறித்தன்று' என்பது, கற்பெனப்பட்ட சிறைமேல்வைத்து ஆற்றுவித்தல் என்பது. அஃதாமாறு, மேற் சொல்லின முறையானெல்லாம் ஆற்றுவிப்பவும் ஆற்றாளாய்நின்ற தலைமகளை இவ்வாற்றானே ஆற்றுவித்துக் காண்பன் எனக் கருதி,