பக்கம்:இலக்கியக் கேணி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிப்பெருமாள் 65

திருமுருகாற்றுப்படை யுரை

திருமுருகாற்றுப் பட்ைக்குள்ள பல உரைகளில் நச்சினர்க்கினியருரையே எல்லாரும் அறிந்ததோருரை யாகும். திருப்பனந்தாள் ரீ காசிமடத்தினின்று வெளி யிடப்பெற்ற திருமுருகாற்றுப்படை உரைக் கொத்தில் பரிப்பெருமாளுரையும் காணப்பெறுகின்றது. அதில் கவிப் பெருமாள் என்று குறிக்கப் பெற்றுள்ளார். இவருடைய உரை எளியநடையில் அமைந்துள்ளது; ஆற்ருெழுக் காகவும் உள்ளது. இ வ் வு ைர சிலவிடங்களில் பிறருரையினும் சிறந்துள்ளது. " சின்னுள் ஆவினன் குடி அசைதலும் உரியன்' என்புழிச் சின்னுள் ” என்பதற்குப் பிறரெல்லாம் ‘சிலநாள் என்று உரைவகுத் திருக்கப் பரிப்பெருமாள் சின்-அசைகிலே’ என்று கூறி நாள் என்பதற்கு எங்காளும் என்று உரை தந்துள் ளார். முருகப் பெருமான் ஆவினன்குடியில் சின்னுள் தங்கியிருத்தலுமுரியன்’ என்னும் உரையினும் எங்காளும் இருப்பன் என்ற பரிப்பெருமாளுரை சிறந்திருத்தல் காண்க. இனிப் பழமுதிர் சோலேமலே கிழவோனே ' என்ற வரிக்குப் பழங்கள் உதிரும் சோலேகளேயுடைய மலைக்குரியவன் ' என்று பிறரெல்லாம் பொருள் தங் துள்ளனர். ஆனல் பரிப்பெருமாள், “ பழங்கள் முற்றப் பெற்ற சோலைமலைக்குரியவன் ' என்று பொருள் கூறி யுள்ளார். இதனுல் முருகனுக்குரியமலே ' சோலேமலே ' என்று பரிப்பெருமாள் கருதினர் என அறியலாம். இதனுைம் திருமுருகாற்றுப்படைக்கு இவருரைத்த உரை சிறந்து கிற்றல் அறியத்தகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/66&oldid=676761" இலிருந்து மீள்விக்கப்பட்டது