பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

‘இலக்கியங் கண்ட காவலர்’ என்னும் இந்நூல் பண்டைத் தமிழ் மன்னர் சிலரின் வரலாறுகளையும், அவர்தம் தமிழ்ப் பாக்களின் கருத்துக் களையும் கூறுவதொன்றாகும். தமிழின் தொன்மை பற்றியும், சங்க இலக்கியம் பற்றியும் அனைவரும் எளிதாக உணரும் வகையில் இதில் கூறப்பட்டுள்ளது.

உயர்நிலைப் பள்ளி மாணவர் நிலைக்கேற்றவண்ணம் சிறந்த நடையில் எழுதப் பெற்றுள்ளமையால், இந்நூல் மாணவர்க்கு ஏற்றதொரு துணைப்பாட நூலாகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

இந்நூலைப் படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்க கால மன்னர் களைப் பற்றி நன்கறிந்து கொள்வதுடன், சிறந்த மொழியறிவும் பெறுவர் என உறுதியாக நம்புகின்றோம்.

பதிப்பகத்தார்