பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

திருமகள் பெயர்கள். பொதுவில் குறள் 'மலர்மிசை ஏகினான். என்றது. முருகனது காதலி வள்ளியை,

'நறுமலர் வள்ளிப்பூ நயந்தோயே" 7 7

-என்று 'பூ'வாகவே பாடியது பரிபாடல்.

அடியவர் பூ

முருகனோ உதயகுமரனோ என ஏற்பட்ட ஐயத்தை மலர்ச்சின்னம் தீர்த்தது. இதுபோன்று திருமங்கையாழ்வாருக்கு ஓர் ஐயம் எழுந்தது. ஆனால், இது தெளிவோடு ஏற்பட்ட ஐயம். ஆழ்வார்களில் நம்மாழ்வார் திருமாலே போன்று கொள்ளப் பட்டவர்; போற்றப்பட்டவர். திருமங்கையாழ்வார் இந்நோக்கில் நம்மாழ்வாரைப் பார்க்கின்றார்.'இத்திருவுரு திருமால் திருவுருவோ, நம்மாழ்வார் திருவுருவோ' என்று ஐயங்கொண்டவர் போன்று வினவுகின்றார்.

'இப்பெருமானுக்கு,

 இருப்பிடம்,திருக்குருகூரோ (நம்மாழ்வார் ஊர்),
திருப்பாற்கடலோ?

பெயர்,பராங்குசனோ (நம்மாழ்வார் சிறப்புப்பெயர்),
நாரணனோ ?

சூடும் சின்னப்பூ, மகிழம்பூவோ (வகுளம்), துளசியோ தோள்கள் இரண்டோ , நான்கோ ?' 7 8

-என்பதன் மூலம் நம்மாழ்வாரது பூ (வகுளம்) மகிழம்பூ எனப்பாடினார்.

அழகர் பிள்ளைத் தமிழ் என்ற நூலும்,

"இருபுறம் வகுளம் நாற்றிய" 79

-என்று பாடியது. இதனால், கடவுளர்க்கு அடையாளப்பூ அமைந்தது போன்று கடவுள் அடியார்க்கும் சின்னப்பூவைக் காண முடிகின்றது.



77 பரி: 14:22
78 சேமம் குருகையோ; செய்ய திருப் பாற்கடலோ?
நாமம் பராங்குசனோ, நாரணனோ ?-தாமம்
துஎவோ, வகுவமோ? தோளிரண்டோ,நான்கோ?
உளவோ பெருமானுக்கு.
79 அழ. பி. த. 12