இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்
129
மற்றபடி, புகழுக்காக உயிர் கொடுப்பதும், பழிக்காக உலகப் பரிசை மறுப்பதும் எல்லாம் ஒழுக்கத்தால் விளையும் உடலாண்மை, உளவான்மையால்தாம்.
ஆகவேதான், வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ, கை வேண்டும் என்கிறோம். கை உயர உயர வாழ்க்கையும் உயரும். ஆன்ம லயமும் உயரும். ஆனந்தம் பெருகும். அளப்பரிய வெற்றிகள் குவியும். நல்லதொரு வாழ்வை நாம் வாழ்ந்தோம் என்ற திருப்தியும் உண்டாகும். தினம் தினமும் வாழ்கிற பொழுதும் கற்கண்டாகும்.