பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

127

யொழிய யிறப்ப லென்பதிண் டிளமைக்கு முடிவே’ என்று அவன் கருதுகின்றான். எனினும், “அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் வீட்டோடு கின்றுவிட்டால் வந்தெய்துமோ? வினே விழைவார் மனே விழைந்து மடிமை யோடு தாளாண்மையற்றுக் கிடந்தால் இல்லறக் கடமைகள் இனிது கிறைவெய்துமோ? கை கடந்த காமத்தால் வருவன நேரே பகையல்லவாயினும் ஆக்கஞ் சிதைத்தல் அழிவுதலைத் தருதல்’ உறுதியே அன்றாே மேலும்,

‘ பெருமையும் உரனும் ஆஉே மேன’

என்றபடி உள்ளத்தின் உரம் காரணமாகத் தன் தலைமை தோன்ற,

“ கேள்கே டுன்றவும் கிலைஞர் ஆரவும்

கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் ஆள்வினைக் கெதிரிய ஆக்கமொடு புகல்சிறந்து’

பொருள் தேடல் இன்றியமையாமையன்றாே!

ஆயினும் பெண்டிர் இயல்பு,

“ அச்சமும் காணும் மடனும்முங் துறுத்தல்

நிச்சமும் பெண்பாற் குரிய என்ப”

என்று தொல்காப்பியத்தில் கிளத்தப்பட்டுள்ளது. கம் பிரிவு அறியா கலன்’ என்றபடி பிரிவென்பது ஒன்று உண்டெனவே அறியாத பேதை தலைமகள் ஆவள். எனவே தன்மாட்டு அன்பும் அறிவுமின்றித் தலைமகன்

31. குறுந்தொகை : 151: 5-6 32. திருக்குறள், பெண்வழிச்சேறல்; பரிமேலழகர் விளக்கம். 33. தொல்காப்பியம்: 10 44

34. அகநானூறு: 98 : 1.2

35. தொல்காப்பியம்: 10.45