பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43



கொடாமலும், கடுகிலேயாக இருந்து பல பண்டங்களை வாங்கி விற்றுவந்தனர் எ ன் று ம் பட்டினப்பாலே குறிப்பிடுகின்றது:

“ நடுவுகின்ற கன்னெஞ்சிஞேர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி கொள்வது உம் மிகை கொளாது கொடுப்பது உம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும். “10

தமிழ் நாட்டின் கடற்கரைப் பட்டினங்கள் உலக வாணிபச் சங்தையிலே சிறப்பிடங்களைப் பெற்று விளங்கி வந்தன. தமிழர் திரைகடலோடியும் திரவியம் தேடினர். கடற்பயிற்சி மிக்கிருந்த காரணத்தால் ஆழி, புணரி, முந்நீர், பெளவம், பரவை, ஆர்கலி, கடல் முதலான பல சொற்கள் “கடல்" என்னும் ஒரே பொருளைக் குறிக்கத் தமிழில் ஏற்பட்டன. கப்பல்களைத் திசை காட்டி அழைக்கும் கலங்கரை விளக்கங்கள் பழங்காலத்தில் சிறப்புற அமைந்திருந்தன. 11 கிறித்துவுக்குப் ப)ெ நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழரின் கப்பல்கள் சேர காட்டுத் தேக்கு மரங்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று அங்காட்டின் பல நகரங்களில் பல கட்டடங்கள்

10. பட்டினப்பாஅல; வரிகள் 207-212 11. வானம் ஊன்றிய மதகல போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி விண்ணுற நிவந்த வே யா மாடத்து இரவின் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி

உரவு நீர் அழுவத்து ஒடுகலம் கரையும்."

-பெரும்பாணுற்றுப்படை: 346-350”