பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணந்துரை குடியரசு பெற்ற திருநாடாகிய நம் பாரதத்தை இன்று ஆளுவோர் அமைச்சர்களே. அவர்கள் வழிவழி யாக நாடாண்ட அரச மரபினால்லர் ; வாழையடி வாழை யாக அமைச்சுரிமை பூண்டு அரசு செலுத்துவோருமல்லர் 5 நாட்டு மக்களின் நல்லாதாவைப் பெற்று நாடாளும் பீடத் தில் ஏறியவர். அந்த உரிமையைப் பெறுவதற்கு இங் நாட்டில் தோன்றிய ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் தகுதியுண்டு. "ஏடு தாக்கிப் பள்ளியில் இன்று பயிலும் பையனே, நாடு காக்கும் தலைவய்ை நாளே வரப்போகிருன் என்று பாடினர் ஒரு பசுங் கமிழ்க் கவிஞர். இன்றைய மாணவர் களே எதிர்கால மதியமைச்சர்சள். அத்தகைய சிறப்பை எய்துதற்குரிய இளைஞர்கள், நம் பண்டை இலக்கியங்களில் கண்டு அறியலாகும் அமைச்சர்களைப் பற்றியும், அவர்கள் அரசியல் நடாத்திய ஆற்றலைப் பற்றியும் அறிந்து கொள்ளு தல் சிறந்த பயனளிப்பதாகும். அக் கருத்துடனேயே 'இலக்கிய அமைச்சர்கள் என்னும் இந் நூலை எளிய உரை நடையில் ஆக்கினேன். இதனே வெளியிட்டு, என்னைத் தமிழ்ப்பணியில் எங்காளும் ஊக்கிவரும் உயர் நோக்கின ாகிய கழக ஆட்சியாளர்-கன்னித் தமிழ்க் காவலர் வ. சுப்பையாப் பிள்ளையவர்கட்கு எப்போதும் நன்றி யுடையேன். இந் நூலைக் கண் அணுறும் கலாசாலைத் தலைவர்களும் தமிழ்ப் புலமைப் பெருமக்களும் இதனைத் தத்தம் பள்ளி களில் பாட நூலாக்கி எளியேனே ஆதரித்தருளப் பணி கின்றேன். தமிழ் வெல்க ! அ. க. நவநீதகிருட்டிணன்