உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 குளிப்பாட்டல் நடைபெறுகிறது! தனபதி-அய்யோ- அந்தத் தமிழன்-இலங்கையின் வளம் காணப் போனவன்! ஐந்து பிணந்தின்னும் கழுகுகளின் தீனியாகிறான்! தனபதி செத்து மடிவதைக் கண்டு கடைக்குள்ளிருந்த அவரது நண்பர்கள் வெளியே ஒடி வருகின்றனர். அந்தத் தமிழர்களையும் கொன்று குவிக்கச் சிங்களவர்கள் பாய்கின்ற னர், ஆனால் அவர்கள் தப்பி விடுகின்றனர். அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று கதறி யிருக்கிறார்கள் தப்பிப் பிழைத்தவர்கள்! காவல் துறையினர் அது பற்றிக் கவலைப் பட்டுக் கொள்ளவே இல்லையாம்! எப்படிக் கவலைப்படுவார்கள்? தமிழர்களை நிலைகுலையச் செய்து அடக்கி ஒடுக்கத் திட்டமிட்டுக் கொண்டு ஆட்சி யாளர்களே வன்முறைகளுக்குத் தூபமிடுகின்ற அந்தத் தீவில் - பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டு கின்ற காரியம்தான் நடைபெறுகிறதே தவிர, தவிர, சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படுவதாக ஏமாளிகூட ஏற்றுக்கொள்ள இயலாது! இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகைமூட்டிட இடை பில் யாரோ சதி செய்கிறார்கள் என்பதெல்லாம் இலங்கை அரசின் திசை திருப்பும் பேச்சேயாகும்! இலங்கை அரசுதான்! தமிழனை நாதியற்றவன் எனக் கருதிக் கொண்டு அவனைக்கொலை செய்து-மானபங்கம் செய்து-அடக்கு முறைக்கு ஆளாக்கி-அவன் உடமைகளை உரூத்தெரியாமல் ஆக்கி- அழித்து ஒழித்து விடலாம் எனத் திட்டம் வகுத்திருப்பதைப்போல் தெளிவாகத் தோன்று கிறது! தமிழர் நூல் நிலையங்கள் தீக்கிரை-ஆலயங்கள் சேதம்- தமிழர்கள் படுகொலை-கற்பழிப்பு-இலங்கைத் தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்தை கழுவில் ஏற்றிக் கொல்ல வேண் டும் என்று இலங்கை நாடாளுமன்றத்திலோ ஆளுங்கட்சி யின் ஆணவப் பேச்சு-தமிழனைக் கண்டாலே கொல்வது என்ற திட்டத்திற்கு உதாரணமாக இதோ தளபதியின் உயிர்ப்பலி! இவ்வளவும் செய்துவிட்டு இலங்கை அரசு சாகச நாட கம் ஆடுகிறதென்றால்-