32
இலட்சிய வரலாறு
ஆதிக்கத்தை அறுபடச் செய்யப் பெரும் படை திரட்டி நடத்தக் கூடியவர் பெரியார் என்பதைத் தோழர் சண்முகம் அழகுறத் தமது பேருரையிலே எடுத்துக் காட்டினார். திருச்சி மாநாடுகள் விழிப்புற்ற எழுச்சியற்ற திராவிடத்தின் உருவைக் காட்டிற்று? பெரியாரின் செல்வாக்குச் சிறப்புத் தரும் சித்திரங்களாகவும், உறுதியுடன் உழைக்கும் தலைவரை, ஒருபோதும் வாலிப உலகு மறவாது, பின் பற்றத் தயங்காது என்பதை விளக்கும் காட்சிகளாகவும் இருந்தன. மறக்கொணாத காட்சிகள் ! மதியுடையோருக்கு, திராவிடத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை உணரச் செய்யக்கூடிய காட்சிகள்! திருச்சி, தன் கடமையை மிகமிகப் போற்றக்கூடிய விதத்திலே நிறைவேற்றி விட்டது. நம்மாலே முடியுமா" என்று கொஞ்சம் பயந்த குரலிலே பேசியே பழக்கப்பட்ட நண்பர் வேதாச்சலம் அவர்களின் விடாமுயற்சியின் பயனாக ஏற்பட்ட வெற்றி, அந்த மாநாடுகள்! அவருக்குப் பக்க பலமாக இருந்தனர், பொன்மலை, திருச்சி, தஞ்சை முதலிய பல பகுதிகளிலே உள்ள பெரியார் தொண்டர் படையினர். மாநாட்டு வெற்றிக்கான பங்கு செலுத்த ஒவ்வொரு வட்டாரமும் ஆர்வத்துடன் முன்வந்து. அற்புதமான வெற்றியை உண்டாக்கிற்று. திருச்சி மாநாடு கூடும்போது பெரியாருக்கு வயது 67. மா நாடு முடிந்த பிறகு அவருக்கு வயது 45. அவ்வளவு "வாலிப முறுக்கு " ஏற்பட்டு விட்டது. இளைஞர்களின் எழுச்சிக் குரலைக் கேட்டதன் பயனாக !! மாநாட்டுக்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையிலே, இடையிடையே நேரிட்ட தொல்லைகளும், திடீர் ஆபத்துக்களும் பல. அவை யாவும், கரும்புக்குள்ள கணுப்போலாயின ! திருச்சித் தோழர்களை நாம் மனமாரப் பாராட்டுகிறோம்! வெற்றிகரமாக அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்திய பெருமையை அடைந்த திருச்சி, திராவிட நாடு திராவிடருக்கு ஆக்கப்படுவதற்கான முயற்சி முகாமாகி, பயிற்சிக் கூடமாகி, பாசறையாகி. திராவிடத்துக்கு வழி காட்டும் என்று நம்புகிறோம். மாநாடு வெற்றிகரமாக நடந்தேறப் பல்வகையானும் உதவி புரிந்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, வாழ்க திராவிடம் என்று இதனை முடிக்கிறோம். திருச்சி மாநாடு உண்மையிலேயே, திராவிட-