பக்கம்:இல்லற நெறி.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502

இல்லற நெறி


உணர்ச்சிகளையும் தூண்டிவிடுகின்றது. இந்த உணர்ச்சிகள் மிகத் தீவிரமாக எழுவதால் இவற்றிற்கு இனவிழைச்சினைத் தவிர வேறு மருந்தே இல்லை. மேலும், இயல்பாவவே காமக் களியாட்டத்தை நாடும் பெண்களிடம் தம்மிடம் பால் வாழ்க்கை முடியப் போகின்றது என்ற அச்சம், இனிமேல் கருப்பம் ஏற்படாது என்ற துணிச்சலான எண்ணம், அத ல்ை தாம் அதிகமாகக் கலவி புரியலாம் என்ற சுதந்திர எண் ணம் ஆகியவை அதிகமான காமக் கிளர்ச்சிக்கு க்காரணங் களாகும்: இங்ங்னம் அதிகமான பால்விழைவு பெண்ணிடம் ஏற்படுவதற்கு நேர்மாமுன மாற்றம் கன்வனிடம் காணப் படுகின்றது. மனைவியைவிட சில ஆண்டுகள் மூத்தவனுக இருப்பதலுைம், முன்னைய ஆண்டுகளைவிட இப்பொழுது அவனிடம் ஆன்தன்மை சற்றுக் குறைந்திருப்பதாலும் இல் வாழ்க்கை இன்பத்தையே குலைப்பதற்கான பேரிடர் - அவல விளைவு-காத்துக்கொண்டுள்ளது.

சிலரது எல்லைமீறிய செயல்: பெண்ணின் உளவியல் அறியாதோரும் பெண்ணின் உடலழகு அவளது உள வாழ்க் கையில் பெரும்பங்கு பெறுகின்றது என்பதை நன்கு அறிவர். சூதக ஒய்வுக்கு பின்னர் தமது அழகெல்லாம் பறிபோகும் என்ற எண்ணமும், வயது ஆகிக்கொண்டுள்ளது என்றகவல்ை யும் பெண்ணின் மனத்தில் குடிகொள்ளுகின்றன. இந்த எண்ணங்கள் அவளிடம்புதிய மனப்பான்மையைத் தோற்று விக்கின்றன; இதன் விளைவு பயங்கர வடிவெடுக்கின்றது. வயது வந்த பலருக்கு தாயாக ஆன பின்னரும், சில பென் களிடம் தோற்றத்திலும் ஆடையணிவதிலும் இளமையாக இருக்க வேண்டும் என்ற மட்டுமீறிய ஆவல் திடீரென்று தோன்றுகின்றது. இஃது அவளது உள்ளத்தில் காம இச்சை மறையப் போகின்றதே என்ற நனவிலி அல்லது நனவுப் போராட்டத்தின் அறிகுறியாகும். பல பெண்கள் இப் பருவத்தில் ஏளனத்திற்கு அல்லது ஆபத்திற்குக் காரண மாகும் அளவிற்கு எல்லைமீறிப் போகின்றனர்! அவர்கள் செய்யும் சில தகாத செயல்கள் சமூகத்தோடும் தம் கணவன் மாரோடும் முரண்பாட்டினை விளைவிக்கின்றன. இவை டிண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/508&oldid=1285323" இலிருந்து மீள்விக்கப்பட்டது