உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம்

1

பொருள் தருவதாம். நடுக்கம் உண்டாகும் போது தலைகால் கை நாடி நரம்பு பேச்சு எல்லாமும் ஆடுதல் உண்மையால் ஆடிப் போதல் அல்லது ஆடிவிடுதல் என்பது அஞ்சி நடுங்குதலைக் குறிப்பதாயிற்று.

وو

செய்தியை அன்றிக் கொடிய விலங்குகளைக் கண்ட போதும் அஞ்சி நடுங்கல் இயற்கையே. “அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே என்றார் தொல்காப்பியர்; ஆடிவிடுவார் என்பதை அறிந்து கொண்டால், அவ்வாட்டம் கண்டு மகிழ்தற்கே ஆட்டி வைக்கும் ஆட்களும் இல்லாமல் இல்லையே என்பது விளங்கும். ஆண்டிகூடி மடங்கட்டுதல் - செயல் நிறைவேறாமை

L

திருமடப் பொறுப்பாளர், செல்வாக்காளர், தொண்டால் சிறந்தோர், பற்றற்ற தூயர் ஆகியோர் இவ்வாண்டியரல்லர், உழையாமல் உண்ண ஒருவழி கண்ட போலியாண்டியர். அவர்கள் சிலர் கூடி. இப்படி ஒரு மடம், இப்படியொரு கிணறு. இப்படியொரு தோட்டம் எனப் பலப் பல திட்டமிட்டுப் பேசி, பசி வந்ததும் சட்டி தூக்கிக் கொண்டு பிச்சையெடுக்கப் போகின்றவர். கூடும் போது தாடியசைப்பாலே திட்ட மிட்டு, பசி வந்ததும் மறப்பவர். ஆகலின் நிறைவேறாத் திட்டம் இவ் வாண்டியர்திட்டம். செயலூக்கமில்லார் கூடித் திட்டம் போடு வதை அறிந்தவர். ஆண்டி கூடி மடங் கட்டியதுபோல் தான் உங்கள் திட்டம் இருக்கும்” என்பர்.

66

ஆண்டுமாறி - வாழ்ந்து கெட்டவன், வாழ ஒட்டாதவன்

66

ஆண்டு என்பது ஆட்சி செய்து என்னும் பொருளது. மாறி என்பது அவ்வாட்சி நிலை மாறியது என்னும் பொருளது. சிலரை வசை கூறு முகத்தான் இவ்வழக்கு உள்ளது. ஆண்டு மாறி நீ தொட்டது எது விளங்கும்” என்பர். "ஆண்டுமாறி நீ பார்த்தாலே பச்சைமரமும் பட்டுப்போகுமே" என்பது இன்னும் உச்சப்பழமொழி.

வாழ்ந்து கெட்டவன் என்பதால் எந்த ஒன்றையும் வாழ விடமாட்டான் என்னும் பொருள் தருவதாக வழக்கில் அமைந் துள்ளது.

ஆயிரங்காலத்துப் பயிர் - திருமணம்

திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்பர். மூன்று மாதம், ஆறுமாதம், ஓராண்டு, பத்தாண்டு எனப் பயன் பயிர்கள்