வரலாறு:
யாப்பருங்கலம்
(குறள் வெண்பா)
591
66
'வாஅம் புரவி வழுதியோ டெம்மிடைத்
தோஒம் நுவலுமிவ் வூர்”
இதனுட் 'புரவி வழுதி' என்று அடைப்பெயர் சார்த்தி அளபெடுப்பத் தொடுப்பினும் தொடையானந்தம்.
66
(குறள் வெண்பா)
'வாஅ வழுதி மதுரை மறுகினிற் போஒ பகைமுனைப் போர்”
இஃது அடையடாமையின் மிக வழு.
16
இனி, ஆனந்தப் பையுள்' என்பதும் ஒன்று உண்டு: அஃதாவது, களவினுளாயினும் கற்பினுளாயினும் தலைவனும் தலைவியும் தம்மிற் பிரிந்துழிப் பிரிவாற்றாது கையறு துயர மொடு காட்சிக்கு அவாவி மெய் மெலிவுற்று அழிவுழி யிரங்கிப் பாட்டுடைத் தலைவனது நாடானும் ஊரானும் குறித்து, அவன் ஊர் மேல் அன்றில் ஏங்கினும், குயில் கூவினும், ஆயர் குழலிசை கேட்பினும், ஏற்றின் மணிக்குரல் கேட்பினும், அவனாடு சூழ்ந்து கிடந்து அவள் ஏங்கினும், ‘ என்னுயிர் கழியும்,' என்று இவ்வாறு கூறினும், 'அவன் ஊர் அனையாள், நாடு அனையாள், உயிரி கழிகின்றது!' எனினும், பிறவாற்றானும் குணமேம் பட்டன ஊரும் நாடும் பார்த்துச் சார்த்திக் கூறினும், உவப்பினும் அவை ஆனந்தப் பையுள்.
என்னை?
“களவினும் கற்பினும் கலக்க மில்லாத் தலைவனும் தலைவியும் பிரிந்த காலைக்
கையறு துயரமொடு காட்சிக் கவாவி எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப் பாடப் படுவோன் பதியொடும் நாட்டொடும் உள்ளுறுத் திறினே யுயர்கழி யானந்தப்
பையுள் என்று பழித்தனர் புலவர்
என்று எடுத்து ஓதினார் அகத்தியனார்.
(ஆனந்த ஓத்து)
அவற்றுக்கு இலக்கியம் வந்துழிக் கண்டுகொள்க.
1.
"விழுமங்கூர வேய்த்தோள் அரிவை, கொழுநன் வீயக் குழைத் துயங் கின்று” புறப். வெண். 226. இதன் எடுத்துக் காட்டையும், 228. 246 ஆம் புறப்பாடல்களையும் காண்க.