உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

இன்றியமையாதவள் என்பதும், தோழியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம்” என விளக்குகின்றது.

தோழி சொல்லாடும் இடங்கள் களவுப் பகுதியில் முப்பத்து இரண்டும், கற்புப் பகுதியில் இருபத்து ஒன்றும் ஆக ஐம்பத்து மூன்று எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர் தொல்காப்பியனார். அவள் உரையாடும் இடங்களையும் திறங்களையும் நோக்கப் பெண்ணியல்பு என்று சொல்லப் பெறும் பெருமைக் குணங்கள் எல்லாம் ஓருருக்கொண்டு முழுமையாக அமைந்த ஓர் அரிய படைப்பே தோழி என்பது தெளிவாகும்.

L

தோழிக்கும் தலைவிக்கும் உரிய உரிமை, உயிர் உரிமை; அதனால் பிறருக்கெல்லாம் தலைவியாக இருப்பவளும் தோழிக்குத் தோழியாகவே விளங்குகிறாள். அவள் இவளைத் தோழி என்கிறாள்; இவள் அவளைத் தோழி என்கிறாள்; இத்தகைய ஒத்த உரிமையே தோழமையின் நிலைக்களம். இன்னும் ஒருபடி மேலே செல்கிறது அவர்கள் தோழமை! தோழி, தலைவியை ‘அன்னை' என்று உரிமையாய் அழைப்பாள்; தலைவியும் தோழியை 'அன்னை’ என்று உள்ளன்பால் அழைப்பாள். 'நம்தாய்’, ‘நம் தலைவர்’ ‘நம் வாழ்வு', 'நம் உயிர்’ என்று இருவரும் ஒப்பிதமாகக் கூறுவர். தங்கள் உயிர் கலந்து ஒன்றிய தோழமையை ஒரு தோழி சொல்கிறாள்.

தாயோ, தன் கண்ணை விட இவளை மேலாக விரும்பு கிறாள்; தந்தையோ, இவள் கால் தரையில் படுவதையும் பொறுக்காதவனாம். உன் சிற்றடி சிவக்குமாறு எங்கே செல்கிறாய்' என்று தடுப்பான். நானும் இவளுமோ பிரிவு இல்லாமல் அமைந்த நட்பால், இரண்டு தலைகளையுடைய ஓருயிர்ப் பறவை போல உள்ளோம்! - தலைவியும் தோழியும் இரண்டு தலைகளையுடைய ஒரு பறவையாம்; ஓர் உயிராம்; எத்தகைய அரிய உவமை! இதைக் கருதித்தான் தொல்காப்பியனார் 'தாங்கருஞ் சிறப்பின் தோழி' என்றார் போலும். இனித் தலைவன் சொல்கிறான்; "தோழி எதைச் செய்கிறாளோ, அதையே செய்கிறாள் தலைவி; மிதப்பின் தலைப் பக்கத்தைத் தோழிபிடித்தால், தலைவியும் அத்தலைப் பக்கத்தையே பிடிக்கிறாள்; மிதப்பின் அடிப் பக்கத்தைத் தோழி பிடித்தால், தலைவியும் அப் பக்கத்தையே பிடிக்கிறாள். மிதப்பை விட்டு