உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறும் பேறு

vii

வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது

அது.

பொருள் மட்டுமா வளம்?

புலமை வளமில்லையா?

ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை வளமில்லையா?

-

எல்லாம் வளமே! “மல்லல் வளனே" என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; “வளம் பட வாழ" வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்?

66

“வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம்’

66

என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம்” என்பது (25:33-34)

“நாடென்ப நாடா வளத்தன

99

என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை!

எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை?

எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை?

பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்?

நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால்,

வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் ‘பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால்' கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்!