98
சான்றுகள்
இளங்குமரனார் தமிழ்வளம் - 19
உடன்போக்கு, அறமே என நினைந்த ஒரு தாயுள்ளம் கூறுகின்றது.
“மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி இனிய ஆகுக தில்ல;
அறநெறி இதுவெனத் தெளிந்தஎன்,
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே’
(ஐங். 371)
“மழைபொழிந்து வழிகுளிரட்டும்; அறம் இதுவெனத் தெளிந்த என்மகள் சென்ற இடம்” என்னும் இது, பெற்றவள் உள்ளம் பேசுவது
இல்லையா?
தலைவியைத் தலைவனொடு விடுக்கும் தோழி,
"இவளே நின்னலது இலளே; யாயும்
குவளை உண்கண் இவளலது இலளே; யானும் ஆயிடை யேனே;
மாமலை நாட மறவா தீமே!’
என்பது, குறிய தொடர்களில், எத்துணைப் பெரிய நேய உரை!
""இதுநும் ஊரே; யாவரும் கேளிர்;
பொதுவறு சிறப்பின் வதுவையும் காண்டும்; ஈன்றோர் எய்தாச் செய்தவம்
யாம் பெற் றனமால்; மீண்டனை சென்மே
கண்டோர், தலைவன் தலைவியர்க்கு உரைக்கும் இவ்வுரை, எத்தகு கனிவும் பெருமிதமும் தாங்குதலும் உடையதாகத் திகழ்கின்றது!
66
இது உங்கள் ஊர்; இருப்பவர் எல்லாம் உம் உறவினர்; சிறப்புற மணம் நிகழ்த்துவேம்; உங்கள் பெற்றவர் பெறாப் பேறு எங்களுக்கு வாய்த்தது; வருக” என்னும் இவ்வுரை தாய்மையுள்ளம் தெய்வவுள்ள மாகிச் சுரந்த சுரப்பு அல்லவோ!
உடன்போக்குக்கு ஓர் உள்ளம் உடன்வந்து வழிகாட்டுகின்றதே: "எங்களூர் இவ்வூர்; இதுவொழிந்தால் வில்வேடர் தங்களூர்; வேறில்லை தாமுமூர் - திங்களூர்
நானும் ஒருதுணையா நாளைப்போ தும்மிந்த
மானும் நடைமெலிந்தாள் வந்து”
(கிளவித்தெளிவு)
தொல்காப்பியர் வழங்கிய கூற்றுவகை வெள்ளப் பெருக்கே, சங்கத்தார் அகப்பாடல்களும், பிற்காலக் கோவை முதலிய பாடல் களுமாம்.