உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சே!

பேச்சே.

தமிழ் மலை

பொதுக்

73

கூட்டங்களிலும் இந்தப் பேச்சே, கோயில்களிலும் இந்தப் பேச்சே, குளக்கரையிலும் இந்தப் அறிவுரைக் கொத்து 119-120

ஒருமுகப்பாடு :

ஒரு மாணாக்கன் கணக்கு நூல் பயிலும்போது அதிற் சொல்லப்பட்ட கணக்கு வகைகளிற் கருத்தை அழுந்தவையாமல், தான் விளையாடப்போம் இடத்தையும் தன் நேசரையும் தின்பண்டங்களையும் எண்ணிக் கொண்டே அதனைப் பார்ப்பானானால் அக் கணக்கின் வகைகள் அவற்குச் சிறிதும் புலப்படாமற்போகும். போக மனச் சோர்வடைந்து எத்தனைமுறை பயின்றாலும் இக் கணக்குகள் என் மண்டையில் ஏறவில்லையே' என்று புத்தகத்தை வீசி எறிந்து விட்டுப் போய்விடுகிறான்.

அவன் அக் கணக்கு நூலைக் கையில் எடுத்தவுடனே தன் விளையாட்டுத் தொழில்கள் எல்லாவற்றையும் முற்றும் மறந்து விட்டு எடுத்த பாடத்திலே அறிவை நாட்டுவானானால் எவ்வளவு விரைவில் அவன் அதன் பொருள்களைச் செவ்வையாகத் தெரிந்து தேர்ச்சி பெறுவான்

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி 19.

"மன அமைதி இன்மையைப் புத்தகங்களைப் படிப்பதால் போக்கிக் கொள்வேன்"

"இன்று பகல் முழுதும் ஓய்வாக இருந்தேன். ஆனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கவே விரும்புகிறேன். நாம் இன்புறுவதற்கும் மெய்யறிவு பெறுதற்கும் அல்லாமல் தம்மைச் சார்ந்த மக்கள் அறிவுபெறச் செய்தற்கும் அவர்கள் சிறப்புற வாழ்தற்கும் படியாமல் எதற்காக வறிதே ஓய்வாக இருப்பது

அடிகளார் நாட்குறிப்பு.

எதனையும் நுணுகி ஊன்றி நோக்கி ஆராயும் சிந்தனைத் திறனுடையோர்க்கு இயல்பாகவே வெறும் சொல் விளையாட்டுகளில் கருத்துச் செல்வதில்லை. வேடிக்கைக் குறும்புப் பேச்சுகளும் வெறும் நகைப்பூட்டும் பயனில் உரைகளும் ஆழ்ந்த சித்தனையாளர்கள் பால் இயற்கையாகவே அமைவதில்லை. அடிகளார் உரையாடலில் கூறியது.

-