உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

இனிமேல் இடையிடை என் கட்டுரைகளும் மீட் போலையில் வெளிவரும். அடுத்த ஆண்டுமுதல் இதழ் தோறும் வெளிவரும். இதழ் மிகவிரிவடைந்து சுவடிவடிவும் பெறும்.

24-7-80 பிறந்தநாட் செய்தி

இங்ஙனம்

ஞா. தேவநேயன்

இந்துமாவாரியில் மூழ்கியுள்ள குமரிக்கண்டத் தென் கோடியில் கி.மு. 50000 (ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு முன்பே முழுவளர்ச்சி அடைந்த தமிழே உலக முதல்உயர்தனிச் செம்மொழியும் திரவிடத்தாயும் ஆரிய மூலமும் ஆகும். தேவமொழி என்று ஏமாற்றித் தமிழகத்திற்புகுத்தப்பட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ் தாழ்த்தப்பட்டது. அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். தமிழன் மீண்டும் முன்னேறுவதற்குத் தமிழ் வடமொழியினின்றும் விடுதலையடைதல் வேண்டும். வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள், தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயரமுடியும். அதற்குத் தமிழர் இனி எல்லாவகையிலும் தமிழையே போற்றுதல் வேண்டும். முதற்கண் தமிழர் அனைவரும் தமிழ்ப் பெயரே தாங்கல் வேண்டும். ஆண்டில் ஒருநாளைப் பெயர் மாற்றத் திருநாள்' என்று இனி ஆண்டுதோறும் கொண்டாடி வருவது நன்று. பிறந்த அண்மையிற் பிறமொழிப்பெயர் பெற்றவரெல்லாரும் அந்நாளில் தம் பெயரைத் தனித் தமிழ்ப் பெயராக மாற்றிக் கொள்ளலாம். அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடுவதுடன் ஊர்வலத்தாலும் ஊரார்க்கு அறிவிக்கலாம்.

தமிழ்ப்பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழராவர். தமிழ்ப் பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இருவகைச் சடங்குகளையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும். கடவுள் நம்பிக்கையுள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் ஐந்தாண்டிற்குள் தமிழர் தம் அடிமைத்தனமும் அறியாமையும் அடியோடு நீங்கி மேலையர்போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம்.