பாவாணர்
213
இப்பரிவுக்கும் பாசத்திற்கும் உருகிநிற்கும் நாம் பாவாணர் தம் அகர முதலிப் பணிக்குக் காலத்தால் வேண்டும் ஏந்துகளைச் செய்து உதவாத அரசாண்மை நிலையை எண்ணிக் கருகுகிறோம்! கண்ணீர் பெருகுகிறோம்!
உயிர்ப்பணிக்கு உதவாமல் உடலை எழிலூட்டி வாண வேடிக்கை காட்டி அடக்கம் செய்வதால் எவருக்குத்தான் என்ன பயன்? சிந்திப்பவர்க்கு இச் செய்கைகூடச் சீராகத் தோன்றாதே!
இரங்கல் கூட்டம் நிகழ்ந்த சில இடங்களும் அமைப்புகளும் சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை, சொல்லாக்க மன்றம்
சென்னை, ஒய்.எம்.சி.ஏ. பட்டி மன்றம்
சென்னை, தொலைக் காட்சி நிலையம்
சென்னை,மாநிலக் கல்லூரி
சென்னை, இளங்கோ கலைமன்றம்
சென்னை, வளர் கலை மன்றம்
சென்னை, தமிழியக்கம்
மதுரை, தமிழ்நாடு இறையியற் கல்லூரிக் கால்டுவெல்
மன்றம்.
மதுரை தமிழ்ச் சங்கம்
மதுரை தமிழ் எழுத்தாளர் மன்றம்
மதுரை பசும்பொன் தேவர் பைந்தமிழ் இலக்கிய அணி
கோவை சிந்தனைப் பேரவை
கோவை தென் மொழி இயவம்
கோவை மாநகரப் பகுத்தறிவாளர் கழகம்
திருச்சி உலகத் தமிழ்க் கழகம்
சேலம் உலகத் தமிழ்க் கழகம்
கரூர் பகுத்தறிவு ஆசிரியர் கழகம்
தஞ்சை தமிழியக்கம்