உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

பெற்றோர்கள் குழந்தைகளுடன் அளவளாவுதல் பெருங் கலை; பயன்கலை! இருபாலும் நலம் பெருக்கும் குழந்தைகளால் பெற்றோர் பெறும் இன்பம், தீரா நோய்களை ஆறாத் துயர் களையும் அறவே நீக்கும் மருந்து; குழந்தைகளுக்கோ, “எம்மைப் பெற்ற பெருமையரே பெருமையர்” என்னும் பெருமிதவழியே எழும்பும் பூரிப்பு; இவை குடும்பத்தை இன்ப உலகாக்கும் இணையிலாச் செல்வங்கள். இச் செல்வங்களைத் தாம் அடைந்து இன்புறுவதுடன், உலகும் அடைந்து இன்புற வேண்டும் என அவவாவியவர் திரு.வ.சு. இதற்கு இவராக்கிய குழந்தை நூல்கள் சான்று.

"தாமின் புறுவ துலகின் புறக்கண் காமுறுவர் கற்றறிந் தார்"