உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மதுரைக் கோயில் வரலாறு

"போர்கொண்ட எண்தோள் பொலன்குவடு பொதியும்

வெண்பொடி துடியடித் துவைத்துப்

புழுதியாட்டு அயராவோர் அயிராவணத் துலவும் போர்க்களிற்றைத் துதிப்பாம்’

35

இந்த அடியை இப் பிள்ளையார் முன் நின்று பாடினார் என்றால் தவறா?

பொன் : நீ சொல்வது மிகச்சரியாகவே இருக்கின்றது. கூர்மை யான உன் நினைவாற்றல் எப்படியெல்லாம் ஓடிவந்து உதவுகின்றது. எத்தனைமுறை இந்தப் பாட்டைப் படித்திருக்கின்றேன். இந்த இணைப்புத் தோன்ற வில்லை. நீ மிக எளிமையாகச் சொல்லிவிட்டாய்! ஆனால், இப் பிள்ளையார்க்குத் திருநீறு சார்த்துவது பிற்பட்ட வழக்கம் என்பர்.

கண்

சரி, எப்படியோ என் மனத்திரையில் பட்டது! அதைச் சொன்னேன். அடுத்த பகுதியைப் பார்ப்போமா?