உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பும் அறிவும் உடையீர்!

அன்பு அறிவு முதலான இந்நூற்கொள்கை தமிழகத்திற்குப் புதியது இல்லை. அனைவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் படியாக அவ்வையார் ஆக்கி அளித்த "கொன்றை வேந்தன்" என்ற நூல் போன்று, பழைமையானவற்றையும் காலத்துக் கேற்றனவற்றையும் இணைத்து இயற்றப்பட்ட இச்சிறு புத்தகம் வெளிவருகிறது. 'புதிய கொன்றை வேந்தன்" என்ற பெயரிடலா மாயினும் “ஆத்திசூடி” “கொன்றைவேந்தன்” “வெற்றிவேற்கை” "வாக்குண்டாம்" என்ற நூல்கள் அந்நூலில் வரும் "முதலிரு" சீர்களாலோ "முதற்" சீராலோ பெயர்பெற்றது போலவே இந்நூலும் முதலிரு சீரான "அன்பும் அறிவும்" என்ற பெயரால் வெளியிடப்படுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் ஊக்குவிப் பார்கள் என்னும் கருத்துடையேன்.

இரா.இளங்குமரன்